வெளிநாடுகளில் வாழும் கனிசமான சிரஸ்ற்ரே போராளிகள் தங்களின் வேலைகளைக்கூட பொருட்படுத்தாமல் முகநூல் பக்கம் நேரடியாக மக்கள் முன் தோன்றி கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தனே.
சம்மந்தன் திரு சுமந்திரன் இருபரையும தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக உலகில் வாழும் தமிழீழத் தேசியச் செயல்ப்பாட்டாளர்கள் மற்றும் சிரஸ்ற்ரே போராளிகள் அனைவரும் இணைந்து ஒரே கருத்து உடையவர்களாக தேசியக் கூட்டமைபிற்கு எதிராக கடுமையானே பிரச்சாரங்களை மேற்கொண்டதை நாம் அறிவோம்,
ஆனால் இடைவெளிகளும் இருக்கத்தான் செய்கின்றது.தமிமீழத்தில் 2009ம் ஆண்டு தடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர்கள் தற்பொழுது ஜேனநாயகப் போராளிகள் என்ற பேரில் அவர்கள் செயல்ப்படுகின்றார்கள்.ஆனால் அவர்களை ஏற்பதற்கு கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் முன்வரவில்லை.
மற்றவர்கள் சொல்லும் காரணம் இவைதான் அவர்களை நாங்கள் நம்பவில்லை. நம்பே' நட ஆனால் நம்பிவிடாதே இதுதான் எமது பள மொழி எனவே அவர்களிற்கும் ஒரு சந்தற்பம் கொடுத்துயிருக்கலாம். ஆனால் ஏனைய கட்சிகள் அதை ஏற்க மறுத்ததினால் அவர்களின் தோல்விக்கே அது காரணமாக அமைந்துவிட்டது.
ஜெனநாயகப் போராகள் சொல்லும் காரணம் இவைதான் ஏனை கட்சிகள் எங்களை ஏற்கவில்லை அவர்கள் ஏற்றால் மட்டுமே எங்களால் அவர்களிற்கு குரல் கொடுக்க முடியும் இதுதான் அவர்களின் நிலைப்பாடு ஆனால் உன்மையும் அதுதான்.அதைவிட வடகிழக்கில் பெரும்பாண்மையான தமிழர்கள் வீட்டுச் சின்னத்திற்கே வோட் போட்டுப்பளக்கப்பட்டவர்கள் எனவே அதில் இருந்து அவர்களை மாற்றுவது மிகக்கடினம்.
எமது எழுவது வருடப் போராட்டமான அகிஸ்சை மற்றும் ஆயுதப்போராட்டதை திரு சம்மந்தன் அவர்கள் இனப்படுகொலை இங்கே நடக்கவில்லை என்று எப்ப சொன்னாரோ அன்றையில் இருந்தே எமது மாவீரர்களின் உயரிய தியாகம் விக்கப்பட்டுள்ளது என்பது புலம்பெயர் நாடுகளில் வாழும் புத்திஜீவகளிக்கு இது விளங்கினாலும். பாமர மக்களிற்கு இதை எப்படி கொண்டு சொல்வது என்பது மிகக்கடினமான விடையமாக உள்ளது.
எனவே தற்பொழுது இவர்களின் உன்மையானே செயல்ப்பாட்டை இலகுவான வளியில் பாமர மக்களிற்கு தெளிவுபடுத்தே ஒரு வளியை கண்டுபிடிக்க வேண்டும். மற்றும் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை வெளிநாடு ஒன்றுக்கு அளைத்து எமது நிலைப்பாட்டை அவர்களிக்கு தெளிவுபடுத்த வேண்டும். மற்றும் சிறப்பான ஒரு ஆலோசனையை அவர்களிற்கு வளங்கவேண்டும்.
நன்றி k.nimal
கருத்துகள்