இலங்கையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தமிழர்களிற்கு மட்டும் அல்ல சர்வதேச நாடுகளிற்கும் இலங்கை ஆளும்வர்கத்தின் உன்மையான நிலைப்பாட்டை தோல் உரித்துக்காட்டிவிட்டது என்றே கூறலாம்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடாக உலக நாடுகளிற்குக்காட்டிக்கொண்டாலும் தற்பொழுது அங்கே நடப்பது அரச பயங்கரவாத இராணுவ குடும்ப ஆட்சி என்பதை தமிழர்களில் 80 வீதமான புத்திஜீவகள் புரிந்து விட்டார்கள் என்றே கூறலாம்.எனெனில் வடகிழக்கில் உள்ள பெரும்பாண்மையான தமிழர்கள் வீடு. மீன் சைக்கில் என தங்களின் வாக்குகளைச் செலுத்திவிட்டு ஒரு நல்ல முடிவிற்காக எதிர்பாத்தவண்ணம் இருந்தார்கள்.
ஆனால் தாங்கள் எதிர்பாத்தவர்கள் எவருற்கும் ஆசனம் கிடைக்கவில்லை தாங்கள் எவரை புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவர்களே பதவிக்கு வந்ததையிட்டு மக்கள் கடுமையானே வெறுப்பும் கவலையடைந்தார்கள் என்பதே உன்மை. குறிப்பாக பல இடங்களில் தேர்தல் மோசடி நடந்தாலும் ஆனால் அவை வெளியே வரவில்லை.
ஆனால் யாழில் நடைபெற்ற தேர்தல் மோசடியை கனிசமான தமிழர்கள் நேரடியாகப்பாத்துள்ளனர்.திரு சசிகலா ரவிராஜ் அவர்களின் தேர்தல் வெற்றி முடிவு முதலில் இரண்டாவது இடத்தில் இருந்ததாகவும், சுமந்திரன் திடீர் என 20 ஆயுததாரிகளுடன் வாக்குகள் எண்ணும் நிலையெத்திற்குள் நுளைந்ததும் சசிகலா அவர்களின் நிலை 4 வது இடத்திற்குப் பின்நோக்கித்தள்ளப்பட்டதோடு அவரின் வெற்றி திரு சுமந்திரன் அவர்களின் வெற்றியாக அது மாற்றப்பட்டது.
இது மிகவும் ஜனநாயகவிரோதத் செயலாகப் பாற்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் இது ஒரு கடசித் தேர்தலாகக்கூடப் பாற்கலாம் எனெனில் அங்கே ஜனநாயகம் செத்துவிட்டது. இராணுவ ஆட்சியை நோக்கி அது நகரத்தொடங்கிவிட்டது என்பதே உன்மை.
நன்றி k. nimal
கருத்துகள்